Sunday 10 November 2013

கடந்து போகிறவர்களெல்லாம்
கன்னத்தில் போட்டு நகர்ந்தபோதும்,

பன்னீர் தெளித்து பாலாபிஷேகம் 
நிகழ்த்திய போதும்,

அகல்விளக்கு திரி உயர்ந்து
புறவெளிச்சம் பரவியபோதும்,

அலங்கரித்து மாலையிட்டபோதும்,
ஆதியோடந்தமாய் தீபம் காட்டியபோதும்,

பெருவொலி எழுப்பி தேங்காயுடைத்த போதும்,
சிறுமணியடித்து சரணம் போற்றிய போதும்,

அசைவற்று மௌனம் காத்த
தெருவோரத்து அம்மன்..

நெடுஞ்சாலை அதிகாரிகள் புடைசூழ
வலிய எந்திரத்தோடு உடைத்து
ஆக்கிரமிப்பு என அகற்றியபோதும்
அசைவற்று அதே மௌனம்
காத்துக்கொண்டிருக்கிறாள்…

No comments:

Post a Comment