Friday 8 November 2013





பள்ளியெழுச்சி
பாடலோடு
துயில் எழுவீர்..

அபிஷேகம்
அலங்காரம் முடிந்து,
பக்தி பெருக்கோடு வந்த
பக்தர்களுக்கு
தரிசனம் தருவீர்..

உச்சகால பூசைக்கு பின்
ஓய்வு..

முடித்து..

பால்,தேன்,
பஞ்சாமிர்தம்,
இன்னபிற
அபிஷேங்களுக்கு பிறகு
திவ்ய ரூபத்தில்
காட்சியளிப்பீர்..

அமுத படையலோடு
அர்த்தஜாம பூஜை முடித்து
ஆனந்த சயனத்திற்கு
போகும் முன்.
உணவு செரிக்க
பிரகாரத்திற்குள்
நடந்து செல்வீர்..

குறைந்த பட்சம்,
கோபுரத்துக்கு வெளியிலும்
வந்தால்...

வாசலுக்கு அருகே
வயிறு சுருண்டு,
உடல் நீட்டி,

பாத்திரத்திற்க்கு
பக்கத்திலயே
படுத்திருக்கும்
யாசகனுக்கு,

அதிகம் வேண்டாம்..
ஐந்து ரூபாய்
போட்டுச் செல்லுங்கள்..
பரம்பொருளே...

காலையில்
உங்களுடனே
பள்ளியெழுச்சி
பாடல் கேட்டு
விழித்தெழுபவன்,

பாத்திரத்தில் கிடந்த
ரூபாய் கொடுத்து,

தள்ளி நின்று,
விரல்கள் தீண்டாமல்
காகித கோப்பையில்
கொடுக்கப்படும்
தேநீர் குடித்து விட்டு..

உற்சாகமாய்
பிச்சையெடுக்க போகலாம்….
இந்த நாள்
இனிதாகும்..



No comments:

Post a Comment