Saturday 9 November 2013

எல்லா தருணங்களிலும்
யாரேனும்,
எதைக்கொண்டோ,
நிரப்பிவிட்டுப் போகிறார்கள்..
என் பாத்திரத்தை..

ஒரு முறை
மழலையின் சிரிப்பொன்று,
என் பாத்திரத்தில்
ஆனந்தத்தை நிரப்பிவிட்டுப் போனது..

வேறொருநாள்,
ஒரு பெண்ணின் கண்ணீர்,
என் பாத்திரத்தில்
துயரத்தை நிரப்பிவிட்டுப் போனது..

பிறகு
ஒரு உழைப்பாளியின் வியர்வை,
என் பத்திரத்தில்
உறக்கத்தை நிரப்பிவிட்டுப் போனது..

மற்றொருநாள்
ஒரு பறவையின் எச்சம்,
என் பாத்திரத்தில்
பசுமையை நிரப்பிவிட்டுப் போனது..

நேற்றைய விடியலில்,
கடந்துபோன ஒரு தேனீ,
என் பாத்திரத்தில்
மகரந்தத்தை நிரப்பிச்சென்றது..

இப்போதும்கூட..
மவுனமும், மேகமும் போர்த்திய
இந்த நிலவு,
வெறுமையை நிரப்பிக் கொண்டிருக்கிறது..
என் பாத்திரத்தில்…!

No comments:

Post a Comment