Friday 8 November 2013






இலைகளால்
கண்ணீர் துடைத்து,
மெதுவாய் தயங்கி,
விசும்பும் குரலில்
கடவுளிடம்
மன்னிப்பு கேட்கிறாள்.
ஏவாள்..

பின்வாசல் வழியே
உள்ளே நுழைந்து,
”மன்னிப்புக் கேட்க ஒன்றுமில்லை,
நன்றி வேண்டுமானால்
பெற்றுக்கொள்ளுங்கள்”
மெல்லிய கிறக்கத்துடன்
கடவுளிடம் சொல்லிவிட்டு
பதிலுக்கு காத்திராமல்
நகர்ந்துவிடுகிறான்.
ஆதாம்..

எல்லா பழங்களும்
விஷமாகிவிட்ட
ஆப்பிள் மரக்கிளையில்
கடவுளிடம் பரிசு பெறும்
கனவோடு அயர்ந்துறங்கி
ஆசுவாசப்படுத்திக்கொள்கிறது
பாம்பு..

மௌனமாய்
புன்னகைக்கிறார்
கடவுள்..

திட்டமிட்டது..
திட்டமிட்டபடியே நடக்கிறது…

No comments:

Post a Comment