Saturday 9 November 2013



அலைவரிசை தெளிவுக்கு
ஆண்டெணா சுழற்றி, நிறுத்தி..

மண்டல ஓளிபரப்புக்கு
மணிக்கணக்கில் காத்திருந்து..

இடையிடையே நிகழும்
இடையூறுகளுக்கென
தடங்கலுக்கு வருந்தினால்,
தாராளமாக மன்னித்து..

விழிகள் உறைந்து,
வேறுதிசை விலகாது பார்த்த,
ஒலியும் ஒளியும் சுகத்தில்
ஒரு பங்கு கூட கிடைப்பதில்லை..

இருபத்திநாலுமணி நேரமும்
இடைவிடாது இயங்கும் எந்த
இசைத் தொலைக்காட்சியிலும்….

No comments:

Post a Comment