Saturday 9 November 2013

நிழல் தெளிக்கும்
பெரு மரத்தின் கீழே
படர்ந்து கிடக்கும்
நெரிசலற்ற நெடுஞ்சாலை..

வண்ணப்பொடிகள் துாவிய
அலங்கார அழகுடன்,
கருந்தரையில்
உதயமாகிறார்
காக்கும் கடவுள்..

மலர்ப்பாதம்..
பொன்னிற இடை உடை..
ஆயுதமேறிய ஒருகரம்..
பெருமித மகுடம்..
வாடாத வண்ண மாலை..

மெதுவாய்,
மென்மையாய்
உருவெடுக்கிறார் கடவுள்..

கருணை பொழியும்
கண்கள் வரைந்து முடித்ததும்,
அருள் பாலிக்கும்
ஒரு கை மிச்சமிருக்கிறது..

வரைவதற்கான
வண்ணப்பொடிகள்
தீர்ந்துபோனதும்...

முழுமையுறாத அந்த
வரமளிக்கும் கரத்திற்கு
மிக மிக அருகிலேயே இருக்கிறது..
வெறுமையான திருவோடு ஒன்று…

No comments:

Post a Comment