Saturday 9 November 2013






உன்னிடம்
கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு
பதிலளிப்பதற்கான சந்திப்பு அது…

கூடையில் நிரம்பிய
கேள்விகளுடன் வந்தவள்.
வீசுவதற்க்கு வசதியாக
எதிரில் அமர்ந்து கொள்கிறாய்..

மென்மையாக துவங்கிய
உன் முதல் கேள்வி
மலராயிருந்தது..
மகரந்தம் வீசியது….

தொடர்ந்த கேள்விகள்
முட்களாயிருந்தது..
தைத்தது….

மிச்சமாயிருந்த கேள்விகள்
கூர் முனை கத்தியாயிருந்தது..
கிழித்தது…

கூடை கேள்விகள்
தீர்ந்து போனதும்
இன்னும் என்ன கேட்பதென்ற
கூடையில் இல்லாத
இன்னொரு கேள்வியும்
உன்னால்
கேட்கப்படுகிறது…

மௌனத்தில் மூழ்கிய
நிமிடங்கள் நகர்ந்ததும்..

பின்புறத்திலிருந்து எடுத்து
முன்னால் வைத்த
என்னுடைய கூடையிலும்
நிறைய கேள்விகள்
நிரம்பியிருந்தன….

No comments:

Post a Comment